என் செல்ல குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது பொரி உருண்டை . உடலுக்கும் உகந்தது .ஸ்நாக்ஸ் ஆக பள்ளிக்கும் கொடுக்கலாம் ..
தேவையான பொருட்கள் :
அவல் - 3 கப்வெல்லம் - 1 கப்
ஏலக்காய் தூள் - சிறிது
செய்முறை :
- முதலில்அவல் பொறியை சுத்தம் செய்துகொள்ளவும்
- வெல்லத்துடன் 1/2 கப் தண்ணீர்,ஏலக்காய்த்தூள் சேர்த்து வெல்லம் கரைந்ததும் வடிகட்டி,பாகு காய்ச்சவும் .
- சிறு கிண்ணத்தில் சிறிது தண்ணீர் எடுத்துக்கொள்ளவும் .அதில் காய்ச்சிய பாகை சில துளிகள் விடவும் .அந்த பாகுவை திரட்டினால் கரையாமல் வரவேண்டும் .பாகுவை பந்து போல திரட்டி கிண்ணத்தில் வீசினால் ,சத்தம் வரவேண்டும் இதுதான் பாகுவின் பதம் .
- அவலுடன் இந்த பாகுவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து ,கிளறவும். நன்கு கிளறிய பின் ,சூடாக இருக்கும் போதே உருண்டைகள் பிடிக்கவும் .
- பாகு பதம் சரியாக இல்லையென்றால் ,உருண்டைகள் பிடிக்க வராது . இதற்கு வெல்லபாகு காய்ச்சுதல் மிகவும் முக்கியம் .
- விருப்பப்பட்டால் ,பொரியுடன் ,பொட்டுகடலையும் சேர்த்து உருண்டைகள் பிடிக்கலாம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....